தேசிய செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணிடம் ரூ.15 லட்சம் சிக்கியது

பெங்களூரு விமான நிலையத்தில் வெளி நாட்டு பெண்ணிடம் ரூ.15 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தினத்தந்தி

தேவனஹள்ளி:-

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து மும்பைக்கு விமானம் ஒன்று புறப்பட இருந்தது. அதில் பணம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்திற்காக காத்திருந்தவர்களை, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் பயணிக்க இருந்த வெளிநாட்டு பெண் ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் ரூ.15 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்கு அவரிடம் உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விமான நிலையத்திற்கு வந்த வருமான வரித்துறையினர், வெளிநாட்டு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்