தேசிய செய்திகள்

கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி

கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த தகவலை உம்மன் சாண்டியின் மகன் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். உடல் நலம் தேற அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்து பதிவிட்டு இருக்கிறார்.

SCROLL FOR NEXT