தேசிய செய்திகள்

காங்கிரசில் இருந்து விலகிய பிசி சாக்கோ தேசியவாத காங்கிரசில் இணைகிறார்...!

கேரளவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய பிசி சாக்கோ இன்று தேசியவாத காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிசி சாக்கோ கடந்த 10-ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரசில் இருந்து விலகியதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார்.

ஏப்ரல் 6-ம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் அம்மாநில காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கட்சியின் உயர்மட்ட தலைவர்களால் கோஷ்டி சண்டை நடக்கிறது. இந்த கோஷ்டி பூசலை மேலிடம் கண்டுகொள்ளாமல் வளர்க்கிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரசில் இருந்து விலகியதாக பிசி சாக்கோ தெரிவித்திருந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து