புதுடெல்லி,
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிசி சாக்கோ கடந்த 10-ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரசில் இருந்து விலகியதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார்.
ஏப்ரல் 6-ம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் அம்மாநில காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கட்சியின் உயர்மட்ட தலைவர்களால் கோஷ்டி சண்டை நடக்கிறது. இந்த கோஷ்டி பூசலை மேலிடம் கண்டுகொள்ளாமல் வளர்க்கிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரசில் இருந்து விலகியதாக பிசி சாக்கோ தெரிவித்திருந்தார்.