கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் கவர்னர் ஜக்மோகன் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் கவர்னர் ஜக்மோகனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் கவர்னர் ஜக்மோகன் (94) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் கவர்னர் ஜக்மோகனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ஜக்மோகன்ஜியின் மறைவு நம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு. அவர் ஒரு முன்மாதிரியான நிர்வாகி மற்றும் புகழ்பெற்ற அறிஞர். அவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். அவரது பதவிக்காலம் புதுமையான கொள்கை வகுப்பால் குறிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி என்று பதிவிட்டிருந்தார்.

ஜக்மோகனின் மறைவு தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டரில், ஜக்மோகன் ஜி, ஜம்மு & காஷ்மீர் ஆளுநராக இருந்த அவரது குறிப்பிடத்தக்க பதவிக்காலம் எப்போதும் நினைவுகூரப்படும். ஒரு திறமையான நிர்வாகி மற்றும் நாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான முக்கிய முடிவுகளை எடுத்த ஒரு தீவிர அரசியல்வாதி. அவரது சோகமான மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு