தேசிய செய்திகள்

அகிலேஷ் யாதவ் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரியுமானவர் அகிலேஷ் யாதவ். இவரின் மனைவி டிம்பிள் யாதவ் (வயது 43). முன்னாள் எம்.பி.யான டிம்பிள் யாதவ் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், டிம்பிள் யாதவிற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக டிம்பிள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளேன். எனக்கு அறிகுறியற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்... என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு