Photo Credit: ANI 
தேசிய செய்திகள்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்காத மன்மோகன் சிங்..!

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட முக்கிய தலைவர்கள் 5 பேர் பங்கேற்கவில்லை

தினத்தந்தி

புதுடெல்லி,

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு டெல்லியில் முதல்முறையாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று இருக்கலாம் என்று தெரிகிறது.

இதனிடையே, இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட முக்கிய தலைவர்கள் 5 பேர் பங்கேற்கவில்லை. மன்மோகன் சிங் தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏகே அந்தோனி, எம்.பி செல்ல குமார், மணிப்பூர் முன்னாள் துணை முதல் மந்திரி கெய்கங்கம், தரிக் ஹமீத் க்ர்ரா, சஞ்சீவ ரெட்டி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஏகே அந்தோணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவரது மகன் தெரிவித்தார். பிற தலைவர்கள் ஏன் பங்கேற்கவில்லை என்ற விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்