தேசிய செய்திகள்

அயோத்தியில் மசூதி கட்ட அடுத்த ஆண்டு அடிக்கல்: மசூதி மேம்பாட்டு கமிட்டி தகவல்

விழாவில் அனைத்து நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

தினத்தந்தி

மும்பை,

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நிலவி வந்த நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்தநிலையில் உத்தரபிரதேச மாநில அரசு நிலம் வழங்கிய இடத்தில் மசூதி கட்டும் பணியை தொடங்க இருப்பதாக அயோத்தி மசூதி மேம்பாட்டு கமிட்டி தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அதன் தலைவர் ஹாரி அர்பாத் சேக் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில், "மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு நடைபெறும். விழாவில் அனைத்து நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். 5 அல்லது 6 ஆண்டுகளில் மசூதியை கட்டி முடிப்போம். இந்த மசூதி தாஜ்மகாலை விட அழகாக கட்டப்படும்" என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு