தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

பாராமுல்லா,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாராமுல்லா மாவட்டத்தில் உரி பகுதியில் இருந்து 4 பேர் வெளியேறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று 4 பேரையும் கைது செய்தனர். இதில், கோஹல்லான் பிரிவை சேர்ந்த பர்வாயிஜ் அகமது ஹஜாம் என்பவர் வழிகாட்டியாக இருந்து மற்ற 3 பேருக்கு உதவியுள்ளார்.

முகமது சபி ஹஜாம், ரியாஸ் அகமது பட் மற்றும் யாசிர் பட் ஆகிய 3 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், டார்ச் லைட் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு