தேசிய செய்திகள்

குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழப்பு...ராஜஸ்தானில் சோகம்

ராஜஸ்தானில் குளத்தில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம், தித்வானா மாவட்டத்தில் உள்து கெராப் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் பூபேஷ், சிவராஜ், விஷால், சாஹில். இவர்கள் 4 பேரும் 12 முதல் 15 வயதை சேர்ந்தவர்கள். இந்நிலையில் நேற்று சிறுவர்கள் 4 பேரும் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்றனர், அப்பேது எதிர்பாராதவிதமாக குளத்தில் நீரில் மூழ்கினர்.

சிறுவர்கள், வெகுநேரமாகியும் திரும்பி வராததால், அவர்களது பெற்றோர் தேட தொடங்கினர். அப்பேது, குளக்கரையில் சிறுவர்களின் காலணிகள் இருந்ததை கண்டனர். இதைத் தெடர்ந்து சிறுவர்கள் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பெற்றோர்களில் சிலர் குளத்தில் குதித்து தேட துவங்கினர்.

இரவு 9 மணியளவில் இரண்டு சிறுவர்களின் உடல்களை வெளியே எடுத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், இன்று அதிகாலை 2 மணியளவில் மற்ற 2 சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன.

இதனை தெடர்ந்து சிறுவர்களின் சடலங்கள் பிரேத பரிசேதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு