தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் கண்ணிவெடி தாக்குதலில் 4 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பலி

சத்தீஷ்காரில் கண்ணிவெடி தாக்குதலில் 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் இன்று கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

ராய்பூர்,

சத்தீஷ்காரில் பிஜாப்பூர் மாவட்டத்தில் முர்டாண்டா முகாமில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் அந்த பகுதியை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் பணிக்காக சென்றிருந்தனர்.

முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் கண்ணிவெடி தாக்குதல் பாதுகாப்பு வாகனத்தில் சென்று கொண்டிருந்த வீரர்களை நக்சலைட்டுகள் சக்தி வாய்ந்த நில கண்ணிவெடி கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை