யோகி ஆதித்யநாத் 
தேசிய செய்திகள்

ராமர் கோவில் நன்கொடையில் மோசடி: குற்றவாளிகள் தப்ப முடியாது- யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளை முறைகேடு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் குற்றவாளிகள் எவரும் தப்பமுடியாது என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

அயோத்​தி ராமர் கோயி​லில் சுவாமிக்கு அளிக்கப்பட்ட காணிக்கை பணம் மற்​றும் நகைகள் காணாமல் போன​தாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசா​ரிக்க சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து உத்தரப் பிரதேச முதல்​வர் யோகி ஆதித்யநாத் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், எஸ்ஐடி தனது 20 பக்க இடைக்​கால அறிக்​கையை அரசிடம் சமர்ப்​பித்​துள்​ளது. அறக்​கட்​டளை மற்​றும் வங்​கி​யுடன் தொடர்​புடைய சந்​தேக நபர்​கள் உட்பட சுமார் 150 பேரிடம் சிறப்புக் குழு விசா​ரணை நடத்​தி​யுள்​ளது.

மேலும், ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்​கட்​டளையை மறு சீரமைக்க வேண்​டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் 8 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

சிறப்பு விசாரணைக் குழு

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், “அயோத்தி என்பது நம் அனைவரின் நம்பிக்கைக்கும் சனாதன தர்மத்திற்கும் ஒரு அடையாளமாகும்.அயோத்தியின் மீது தவறான பாதையைச் செலுத்த வேண்டாம். ஸ்ரீ ராமரின் கண்ணியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை தொடங்கப்பட்டது.

ஏற்றுக்கொள்ள முடியாது

உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என உறுதியளிக்கிறேன். பொதுமக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சனாதன தர்மத்தின் நம்பிக்கையில் யார் தலையிட்டாலும் அவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். யாருக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படாது” என்றார்.