தேசிய செய்திகள்

இலவச கொரோனா தடுப்பூசி திட்டம் தேர்தல் நாடகம்: மம்தா பானர்ஜியை சாடிய பா.ஜ.க.

மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அறிவிப்பு தேர்தல் நாடகம் என பா.ஜ.க. கூறியுள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி, வருகிற 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்து உள்ளது.

முதலில், சுகாதார பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று கூறும்பொழுது, மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை எங்களுடைய அரசு எடுத்து வருகிறது. இதனை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.

மேற்கு வங்காளத்தில் இந்த வருடம் 294 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நடப்பு அரசின் பதவி காலம் வரும் மே 30ல் முடிவுக்கு வருகிறது. இதனால் தேர்தலை முன்னிட்டு மம்தா இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் கூறும்பொழுது, சட்டசபை தேர்தல் வரவுள்ள நேரத்தில், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றை, தனது பெயரின் கீழ் விளம்பரப்படுத்த மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிகாஸ்ரீ அல்லது மம்தாஸ்ரீ என பெயர் மாற்றம் செய்து தடுப்பூசியை விளம்பரப்படுத்த அவர் விரும்புகிறார். பானர்ஜி, மத்திய அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றி அவரது சொந்த பெயரில் நடைமுறைப்படுத்துகிறார். ஆனால் அது தேவையற்றது என கோஷ் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு