தேசிய செய்திகள்

குஜராத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

குஜராத் மாநிலம் வல்சாத் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் சரக்கு ரெயில் ஒன்று சூரத் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. வல்சாத் மற்றும் சூரத் நிலையங்களுக்கு இடையே ரெயில் வந்துகொண்டிருந்தபோது சரக்கு ரெயிலின் பெட்டிகள் தடம் திடீரென புரண்டன.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ரெயில்வே பணியாளர்கள், விரைந்து வந்து ரெயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்த நிலையில், இன்று சரக்கு ரெயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.  

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு