கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகை

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் இந்தியாவுக்கு வரக்கூடும் என்று மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மற்றும் பிரான்ஸ் அமைச்சர் கிறிசோலா ஜக்கரோபவுலோ ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து அணுசக்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அணுசக்தியில் இந்தியா-பிரெஞ்சு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பிரான்ஸ் அமைச்சர் தற்போது இந்தியா வந்துள்ளார். மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்கை சந்தித்து, கூட்டு ஒத்துழைப்புடன் மராட்டிய மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூர் தளத்தில் அணு உலைகள் அமைப்பதை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசித்தார். இந்தியாவுடன் அணுசக்தி ஆலோசகர் தாமஸ் மியூசெட் உள்ளிட்ட பிற பிரான்ஸ் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து