தேசிய செய்திகள்

யார் காங். தலைவர் ஆனாலும் கைப்பாவையாகவே இருப்பார்கள் - பா.ஜனதா கணிப்பு

அசோக் கெலாட்டோ அல்லது சசிதரூரோ யார் காங். தலைவர் ஆனாலும் கைப்பாவையாகவே இருப்பார்கள் என்று பா.ஜனதா கணித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பா.ஜனதா தேசிய செய்தித்தொடர்பாளர் டாம் வடக்கன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரையை ஊழல் ஒற்றுமை யாத்திரை என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால், கன்னியாகுமரியில் 2ஜி கூட்டாளியான தி.மு.க.வின் ஆசியுடன் இந்த யாத்திரை தொடங்கியது.

அசோக் கெலாட்டோ அல்லது சசிதரூரோ யார் காங்கிரஸ் தலைவராக அமர்ந்தாலும், அவர்கள் கைப்பாவையாகவே இருப்பார்கள். பிரதான ஓட்டுனரான ராகுல்காந்தி, பின்னால் அமர்ந்து இயக்குவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்