தேசிய செய்திகள்

நடப்பு நிதி ஆண்டில் நகை, ரத்தினங்கள் ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடி இலக்கை எட்டும்: பியூஸ் கோயல்

நடப்பு நிதி ஆண்டில் நகை, ரத்தினங்கள் ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடி இலக்கை எட்டும் என்று பியூஸ் கோயல் பேசினார்.

தினத்தந்தி

நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்த இந்திய சர்வதேச நகை கண்காட்சி நேற்று தொடங்கியது. அதில் மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:-

இந்திய பொருளாதாரத்தின் வலிமையான தூணாக நகை மற்றும் ரத்தினங்கள் தொழில்துறை விளங்குகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த தொழிலின் பங்கு 7 சதவீதம் ஆகும். நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி மாதம்வரை நகை மற்றும் ரத்தினங்களின் ஏற்றுமதி 32 பில்லியன் டாலராக (ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி) உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதன் ஏற்றுமதியை 40 பில்லியன் டாலராக (ரூ.3 லட்சம் கோடி) இலக்கு நிர்ணயித்துள்ளோம். நிதி ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கையும் தாண்டி ஏற்றுமதி பெருகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்