தேசிய செய்திகள்

கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் நாளை பிரதமரை சந்திக்கிறார்

கோவாவின் புதிய முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். #GoaCMPramodSawant #PMModi

தினத்தந்தி

பனாஜி,

கோவா முதல்-மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், புதிய முதல்-மந்திரியாக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பதவியேற்றார். துணை முதல்-மந்திரிகளாக மஹாராஷ்டிர கோமந்தக் கட்சியை சேர்ந்த சுதீன் தவாலிகர் மற்றும் கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிக உறுப்பினர்களை கொண்ட தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று பிரமோத் சாவந்த் அம்மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, இன்று காலை 11.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா 20 உறுப்பினர்களின் ஆதரவுடன் தங்களது பெரும்பான்மையை நிரூபித்தது. இதில் பிரமோத் சாவந்த் அரசுக்கு ஆதரவாக 20 பேரும், எதிராக 15 பேரும் ஓட்டளித்தனர். இவர்களில் 14 பேர் காங்கிரஸ் கட்சியையும், ஒருவர் தேசியவாத காங்கிரசையும் சேர்ந்தவர். இதனால், அங்கு நீடித்து வந்த ஆட்சி குழப்பம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இன்று மாலை கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் செய்தியாளர்கள் சந்திப்பில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாளை டெல்லி செல்கிறேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை