தேசிய செய்திகள்

கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற காங்கிரஸ் கோரிக்கை

கோவா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி குணாலை மாற்றுமாறு கோவா காங்கிரஸ் கோரிக்கை.

பனாஜி

கோவா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி குணாலை மாற்றுமாறு கோவா காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், கூறி இருப்பதாவது;-

கடந்த ஆறு ஆண்டுகளாக குணால் கோவாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியில் உள்ளார். குணால் தலைமை தேர்தல் அதிகாரியாக மட்டுமில்லாமல், வேறு சில அரசுத் துறைகளின் செயலாளராகவும் பொறுப்பில் உள்ளார்.

மேலும், குணால் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவாக முழுமையான சார்புநிலையை வெளிப்படுத்தியதையும், காங்கிரசுக்கு எதிராக பாரபட்சமான அணுகுமுறையைக் கொண்டிருந்ததையும் தெரிவித்த போதிலும், இந்திய தேர்தல் ஆணையம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்தகைய காரணங்களால், கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து குணாலை மாற்றவும் என கூறி உள்ளார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு