தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

டெல்லி விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

துபாயில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த தனியார் விமானத்தில் இருந்து இறங்கிய ஒருவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், அவரிடம் இருந்து 2.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் விமான இருக்கையின் கீழே அதனை பதுக்கி வைத்து கடத்தி கொண்டு வந்துள்ளார். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.

அவர் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு சொந்த நாடு திரும்பியுள்ளார். தங்க கட்டிகளை விமானத்திலேயே விட்டு செல்லும்படி தன்னிடம் கூறினர் என அந்த பயணி அதிகாரிகளிடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்