தேசிய செய்திகள்

மதுராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து:, டெல்லி-ஆக்ரா ரயில் போக்குவரத்து பாதிப்பு

மதுராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் டெல்லி -ஆக்ரா இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரா,

உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா அருகே உள்ள ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின. இந்த விபத்தில் எந்த உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால், டெல்லி- ஆக்ரா இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துக்கள் ஏற்படுவது அதிகமாகியுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் ரயில் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. 2 வாரங்களுக்கு முன்பு மதுரா அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. செப்டம்பர் துவக்கத்தில் சரக்கு ரயிலின் 16 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகின.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை