தேசிய செய்திகள்

அமித்ஷாவை சந்தித்த கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்...!

கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

டெல்லி சென்றுள்ள புதுச்சேரி கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 15 நிமிடம் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது தான் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 3 ஆண்டு செயல்பாடுகள் குறித்த புத்தகத்தையும் அமித்ஷாவிடம் வழங்கினார். மேலும் இது வழக்கமான சந்திப்பு என்று கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

SCROLL FOR NEXT