தேசிய செய்திகள்

பேடிஎம் நிறுவனத்தில் சீன முதலீடுகள் குறித்து விசாரணை

பேடிஎம் நிதி சேவை நிறுவனத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பேடிஎம் நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், அதன் வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளது. இந்த நிலையில் பேடிஎம் நிதி சேவை நிறுவனத்தில் (பி.பி.எஸ்.எல்) சீனாவில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வெளிநாட்டு முதலீடு திரட்டுவதற்கான உரிமம் கேட்டு ரிசர்வ் வங்கியில் கடந்த 2020-ம் ஆண்டு பி.பி.எஸ்.எல் விண்ணப்பித்து இருக்கிறது. ஆனால் இதை நிராகரித்த ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு நேரடி முதலீட்டு விதிமுறைகளின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்குமாறு கடந்த 2022-ம் ஆண்டு அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி பி.பி.எஸ்.எல். நிறுவனம் மீண்டும் விண்ணப்பித்துள்ளது.இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் சீனாவின் முதலீடுகள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான கமிட்டி விசாரித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து