தேசிய செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் இல்லை..?!

நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இணையத்தில் புழங்கும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடையும் விதிக்கப்படவில்லை. அவற்றை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளும் இல்லை. இருப்பினும், சமீபகாலமாக அவற்றில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

அதனால், தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கவும், ரிசர்வ் வங்கி சார்பில் அதிகாரபூர்வ டிஜிட்டல் பணம் வெளியிடவும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறியது. சபை அலுவல் பட்டியலிலும் இம்மசோதா இடம்பெற்றது.

ஆனால், இந்த மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வராது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எப்போது மசோதா கொண்டு வந்தாலும், அது நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை