கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

வாக்குறுதி நிறைவேற்றிய விவரத்தை வெளியிடுங்கள் - மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி யோசனை

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று வாக்குறுதி நிறைவேற்றிய விவரத்தை வெளியிடுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மாயாவதி யோசனை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகள் இந்தியாவை 'உலகின் குரு' ஆக உயர்த்த தொடர்ந்து பாடுபட வேண்டும். அதற்காக ஒவ்வொரு குடியரசு தின நாளிலும் மத்திய, மாநில அரசுகள், தங்களைத்தாங்களே மதிப்பீடு செய்து கொண்டு, வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்பது குறித்து ஒரு வளர்ச்சி அறிக்கை வெளியிட வேண்டும். இந்த செயல், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். அத்துடன், குடியரசு தினம் வெறும் சம்பிரதாய விழாவாக இல்லாமல் நடப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து