தேசிய செய்திகள்

சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றும்: பிரதமர் மோடி

சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது: - நமது கிரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அரும்பாடு படும் அனைவருக்கும் உலக சுகாதார தினமான இன்று நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த நமது அரசு தொடர்ந்து பணியாற்றும். மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும்" என்றார்

SCROLL FOR NEXT