தேசிய செய்திகள்

19 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வருவாய் குறைவு

19 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் ஜி.எஸ்.டி வருவாய் குறைந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பல வரிகளுக்கு மாற்றாக ஒரே வரி என்ற தாரக மந்திரத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரிமுறை நாட்டில் அமல்படுத்தப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி என்று அழைக்கப்படும் இந்த வரி வருவாய் ஆனது, கடந்த செப்டம்பரில் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ. 91,916 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய மாத வருவாய் ரூ. 98,202 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின்போது மத்திய அரசுக்கு ரூ. 94,442 கோடி வருமானம் கிடைத்தது. நடப்பாண்டில் வருமானம் ரூ. 2.67 சதவீதம் குறைந்திருக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து