தேசிய செய்திகள்

அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ .95,380 கோடியாக குறைந்தது

கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ .95,380 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அக்டோபர் மாதம் ஜி.எஸ்.டி.யில் கிடைத்த வருவாய் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் நடப்பாண்டு அக்டோபரில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.95,380 கோடியாக இருந்தது. இது, முந்தைய செப்டம்பா மாதத்தில் ரூ.91,916 கோடியாகவும், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபரில் ரூ.1,00,710 கோடியாகவும் இருந்தது.

அக்டோபா மாத மொத்த ஜி.எஸ்.டி. வசூலில், சி.ஜி.எஸ்.டி. ரூ.17,582 கோடியாகவும், எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.23,674 கோடியாகவும், ஐ.ஜி.எஸ்.டி. ரூ.46,517 கோடியாகவும் (இறக்குமதிக்கான வசூல் ரூ.21,446 கோடி உள்பட), தீவை ரூ.7,607 கோடியாகவும் (இறக்குமதி வசூல் ரூ.774 கோடி உள்பட) இருந்தன. மேலும் செப்டம்பருக்கான ஜி.எஸ்.டி.ஆா. 3பி படிவங்களை தாக்கல் செய்தவாகளின் மொத்த எண்ணிக்கை (அக்டோபா 30ம் தேதி நிலவரப்படி) 73.83 லட்சமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட இந்தாண்டு அக்டோபரில் 5.29% அளவு ஜி.எஸ்.டி. வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்