தேசிய செய்திகள்

ஜி.எஸ்.டி. வருவாய் கடந்த மே மாதத்தில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடி

கடந்த மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடியாக உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா 2வது அலையால் நாடு திணறி வரும் சூழ்நிலையில், கடந்த மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 709 கோடியாக உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இவற்றில், 17 ஆயிரத்து 592 கோடி மத்திய ஜி.எஸ்.டி.யாகவும், 22 ஆயிரத்து 653 கோடி மாநில ஜி.எஸ்.டி.யாகவும் கிடைத்துள்ளது.

இதுதவிர ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.53 ஆயிரத்து 199 கோடியாகவும், (சரக்குகள் இறக்குமதியில் கிடைத்த ரூ.26 ஆயிரத்து 2 கோடி உள்பட) மற்றும் செஸ் வரியில் கிடைத்த வருவாய் ரூ.9 ஆயிரத்து 265 கோடியாகவும் (சரக்குகள் இறக்குமதியில் கிடைத்த ரூ.868 கோடி உள்பட) உள்ளது.

இந்த மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் ஆனது கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்த தொகையை விட 65 சதவீதம் அதிகம் என்றும் நிதியமைச்சக அறிக்கை தெரிவிக்கின்றது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை