தேசிய செய்திகள்

முலாயம் சிங் உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார்: மருமகள் அபர்ணா யாதவ்

ராமர் கோவில் குறித்தான எதிர்க்கட்சியினரின் எண்ணம் சிறுமைத்தனமாக உள்ளதாக அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமானவர் முலாயம்சிங் யாதவ். கடந்த 2022-ம் ஆண்டு முலாயம்சிங் இறந்துபோனார். இவருடைய மகன் அகிலேஷ் யாதவ் கட்சி பொறுப்புகளை தலைமையேற்று நிர்வகித்து வருகிறார். முலாயம் சிங்கின் மற்றொரு மகனான பிரதீக்கின் மனைவி அபர்ணா பா.ஜனதா தலைவராக இருக்கிறார்.

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் அபர்ணா பேசியதாவது, "ராமர் கோவில் குறித்தான எதிர்க்கட்சியினரின் எண்ணம் சிறுமைத்தனமாக உள்ளது. ராமர் கோவில் எந்த கட்சியையும் சார்ந்தது அல்ல. ஒருவரால் கட்டப்பட்டதும் அல்ல. பலரின் நம்பிக்கையில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "முலாயம் சிங் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு சென்றிருப்பார்" என்றார்.

கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று, கோவில் கும்பாபிஷேகத்திற்கு குடும்பத்துடன் செல்வதாக அகிலேஷ் யாதவ் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து