கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் நாட்டின் முதல் டி.ஆர்.ஐ. ஆலை: மத்திய அரசு திட்டம்

நாட்டின் முதல் நேரடி குறைக்கப்பட்ட இரும்பு ஆலையை 207 கோடி ரூபாயில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

எஃகு உற்பத்தி துறையில் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் வகையில், முழுமையாக ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கும் நாட்டின் முதல் நேரடி குறைக்கப்பட்ட இரும்பு (Direct Reduced Iron) ஆலையை 207 கோடி ரூபாயில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கனிமங்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனம் தலைமையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாளொன்றுக்கு 20 டன் உற்பத்தித் திறன் கொண்ட இந்த முன்னோடித் திட்டத்திற்கு, எஃகு அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆகியவற்றின் கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்துள்ளது.

பல சர்வதேச ஹைட்ரஜன் - டிஆர்ஐ திட்டங்கள் உயர் தர மேக்னடைட்டைப் பயன்படுத்துகின்றன. இந்தியா ஒப்பீட்டளவில் தரம் குறைந்த ஹெமடைட் தாதுக்களைப் பதப்படுத்துவது ஒரு முக்கிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆலை 2029 ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம், எஃகு உற்பத்தியில் ஏற்படும் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாக குறைக்க உதவும்.

SCROLL FOR NEXT