கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

தவறான அறுவை சிகிச்சையால் நோயாளிகள் பாதிப்பு - தனியார் மருத்துவமனைக்கு 'சீல்'

தனியார் மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் நிலைக்கு சென்றது.

தினத்தந்தி

போபால்,

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அரசு சார்பில் கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட 79 பேருக்கு அரசு நிதியுதவியுடன் அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கண்புரைக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் நிலைக்கு சென்றது.

இதனையடுத்து பாதிப்படைந்த 8 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் மாநில சுகாதாரத்துறையினர் நோயாளிகளுக்கு தவறான சிசிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு 'சீல்' வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்