தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? வெளியுறவுத்துறை விளக்கம்

கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: - கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா எந்த தடையும் விதிக்கவில்லை. தற்போது வரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளோம்.

இதுவரை மொத்தம் 6.44 கோடி கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 1.04 கோடி தடுப்பூசிகள் நன்கொடையாகவும், 3.57 கோடி தடுப்பூசிகள் வாத்தக ரீதியிலும், 1.82 கோடி தடுப்பூசிகள் கோவேக்ஸ் திட்டத்தின் கீழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் அதேவேளையில், உள்நாட்டு தேவையைப் பூத்தி செய்வதும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்