கொல்கத்தா,
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்தது. பருவமழையால் அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கனோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அதேவேளை, அசாமில் மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாமிற்கு மேற்கு வங்காள அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.