தேசிய செய்திகள்

இமாசலபிரதேச முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கிற்கு மீண்டும் கொரோனா தொற்று

இமாசலபிரதேச முன்னாள் முதல்-மந்திரியான வீரபத்ர சிங்கிற்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சிம்லா,

இமாசலபிரதேச முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கி கடந்த மார்ச் 3-ந்தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தநிலையில் ஏப்ரல் 14-ந்தேதி அவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடுதிரும்பினார்.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...