தேசிய செய்திகள்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் சோதனை: கேரளாவில் இன்று முழுஅடைப்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக கேரளாவில் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் சி.பி.முகம்மது பஷீர், தேசிய தலைவர் சலாம், தேசிய பொது செயலாளர் நஜீமுதீன், தேசிய செயற்குழு உறுப்பினர் கோயா உள்பட 15-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) கேரளாவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு