தேசிய செய்திகள்

மனித உரிமை கோர்ட்டு விவகாரம்: 7 மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மனித உரிமை கோர்ட்டு விவகாரம் தொடர்பாக, 7 மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மனித உரிமை கோர்ட்டுகள் அமைப்பது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதில் அளிக்குமாறு கடந்த ஆண்டு ஜனவரி 4-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், 7 மாநிலங்கள், எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம், நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்யாததுடன், வக்கீலும் ஆஜராகாததால், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பதில்மனு தாக்கல் செய்யாத தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஒடிசா, மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...