தேசிய செய்திகள்

ஐதராபாத் சினிமா தியேட்டரில் தேசிய கீதத்துக்கு அவமரியாதை; 3 காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு

ஐதராபாத்தில் சினிமா தியேட்டரில் தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்த 3 காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திரா நகரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 20 வயதுள்ள 3 பேர் ஒரு இந்தி படம் பார்க்க சென்றனர். அவர்கள் 3 பேரும் அங்குள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். தியேட்டரில் படம் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டது.

அப்போது அனைவரும் எழுந்து நிற்க, காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. இதுதொடர்பாக தியேட்டர் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 3 மாணவர்கள் மீதும் தேச கவுரவத்தை அவமானப்படுத்துவதை தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை