தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவேன் அசாருதீன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடப்போவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் கூறினார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் 2014ம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தானின் டோங்சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலத்தின் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அசாருதீன் தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

செகந்திராபாத் தொகுதி மக்களுக்கு பணி செய்ய விரும்புகிறேன். இந்த தொகுதியில் நான் கடினமாக உழைத்து வருகிறேன். இங்குள்ள ஏராளமான கிராமங்களுக்கு சென்று விவசாயிகள் மற்றும் பிற மக்களிடம் பேசினேன். அப்போது அவர்கள், தங்கள் தொகுதியில் நான் போட்டியிடுவதை வரவேற்றனர்.

இந்த தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி தலைமையிடமும், மாநில பொறுப்பாளரிடமும் எனது விருப்பத்தை தெரிவித்துள்ளேன். நான் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவதையே கட்சியும் விரும்புவதாக நினைக்கிறேன். எனினும் இங்கு நான் கேப்டன் இல்லை. இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது கட்சிதான்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த முறை போட்டியிட்ட போதும் வெற்றிக்காக கடுமையாக உழைத்தேன். ஆனால் எப்போதும் உங்களால் பாதுகாப்பாக விளையாட முடியாது. எப்போதும் பாதுகாப்பான விளையாட்டை விரும்பும் நபர் நான் இல்லை.

இவ்வாறு அசாருதீன் கூறினார்.

முன்னதாக, தெலுங்கானாவில் இருந்து பாராளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலில் அசாருதீன் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநிலப்பிரிவு அவருக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு