மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேஸ்புக் நேரலையில் நேற்று பேசியதா வது:-மேற்கு வங்காள மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து 4 மாதங்களுக் குள் மாநில மக்கள் பா.ஜனதாவின் உண்மையான முகத்தை புரிந்து கொண்டனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான மற் றொரு மறைமுக முயற்சியே மக்கள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்களில் கையெழுத்திடுவதற்கும், தனிப்பட்ட தரவுகளை பகிர்வதற்கும் முன்பு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் கையெழுத்திட்டால் செய்தால் தனிப்பட்ட சேமிப்பு மாயமாகி போகக்கூடும்.பெண்களுக்கான அன்னபூர்ணா நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்குவ தில் தாமதம் ஏற்படுவதாக கூறி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தகுதியின்மையை காரணம் காட்டி மாநில பா.ஜனதா அரசு பயனாளிகளின் எண்ணிக் கையை குறைத்து வருகிறது.
நான் அரசியல் இருந்து சன்னியாசம் மேற்கொள்ள போவது இல்லை. பா.ஜனதா ஆட்சியை அகற்றும் வரை ஓயமாட்டேன். பெண்களை நிதி ரீதியாக தன்னிறைவு அடைய செய்வதற்காக நாங்கள் லட்சுமி நிதி திட் டத்தை தொடங்கினோம். ஆனால் பா.ஜனதா அன்னபூர்ணா திட்டத்தில் பணம் வழங்க மதம், இனத்தை கருத்தில் கொள்கிறது.ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மாணவர் பேரவை மற் றும் இடதுசாரி மாணவர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்ட நிலை யில், வளாகத்தில் வன்முறையை பா.ஜனதா திட்டமிட்டு அரங்கேற்றியது.வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர மறுஆய்வு நடவடிக்கையின் மூலம் லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டனர். தேவைப்பட்டால் அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப் பதற்காக மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்.