தேசிய செய்திகள்

”ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம்” -சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது

ஆட்சி அமைப்பதில் பாஜக தோல்வியுற்றால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என கூறும் சிவசேனா இன்று கவர்னரை சந்திக்கிறது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

சிவசேனா முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் 2 ஆண்டுகளுக்கு கேட்கிறது. அதேநேரம் அந்த பதவியை விட்டுக்கொடுக்க பாரதீய ஜனதாவும் தயாராக இல்லை. தற்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. இதனால் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

தற்போது சிவசேனா கட்சி தங்களுக்கு 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும் விரைவில் சிவசேனாவை சேர்ந்தவர் முதல் அமைச்சராக பதவி ஏற்பார் என்றும் கூறி வருகிரது.

இந்த நிலையில் இன்று மாலை சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் எம்பி கவர்னரை சந்திக்க உள்ளார். அப்போது அவர் பெரிய கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைக்க உள்ளார். அக்டோபர் 24 ம் தேதிக்கு பிறகு மராட்டியத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி உடனான சிவசேனாவின் மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.

இது குறித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-

எங்களுக்கு இடையில் கதவு என்று எதுவும் இல்லை. ஒரு முட்டுக்கட்டை உள்ளது, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. பாஜக மிகப்பெரிய கட்சியாக இருப்பதால் முதலில் அரசாங்கத்தை அமைப்பதாகக் கூற வேண்டும். ஆனால் அது தோல்வியுற்றால், நாங்கள் உரிமை கோரலாம் என கூறினார்.

இந்நிலையில், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், கட்சித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்திக்க டெல்லி செல்கிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு