தேசிய செய்திகள்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று பிறந்த நாள்: ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இசைஞானி என்று புகழப்படும் இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இசை உலகின் ராஜா என்றும் ரசிகர்களால் புகழப்படும் இளையராஜாவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்துச்செய்தியை பகிர்ந்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் வாழ்த்துச்செய்தியை பகிர்ந்துள்ள ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இவ்வாண்டுத் தொடக்கத்தில்,அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது