தேசிய செய்திகள்

சட்டவிரோதமாக நிலம் விற்பனை: அயோத்தி மேயர், பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 40 பேர் மீது குற்றச்சாட்டு

அயோத்தியில், அயோத்தி மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்தும், வாங்கியும் மோசடி செய்துள்ளனர்.

தினத்தந்தி

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், அயோத்தி மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்தும், வாங்கியும் மோசடி செய்துள்ளனர். அந்த நிலங்களில் வீடும் கட்டி உள்ளனர். இதில் ஈடுபட்டதாக 40 பேர் பெயர் அடங்கிய பட்டியலை அயோத்தி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், அயோத்தி நகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா, அயோத்தி பா.ஜனதா எம்.எல்.ஏ. வேதபிரகாஷ் குப்தா, பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. கோரக்நாத் பாபா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயோத்தி மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.

ஆனால், மேயரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வும் இதை மறுத்துள்ளனர். அதே சமயத்தில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு சமாஜ்வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. :

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து