விஜயவாடா,
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தடேபள்ளியில் உள்ள தனது இல்லத்தில் நிதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமையை அவரிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.
அப்போது அவர், மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மது குடிக்கும் வழக்கத்தை குறைக்க ஒரு உத்தி வகுக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூறினார்.