தேசிய செய்திகள்

உப்பள்ளியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

உப்பள்ளியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா நவநகர் பகுதியை சேர்ந்தவர் பிரியா (35). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. பிரியா அப்பகுதியில் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்தநிலையில் பிரியாவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் மன கவலையில் இருந்து வந்தார். மேலும் தொழிலாளர்களுக்கு சம்பள தொகை கொடுக்க முடியவில்லை. இ்ந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நவநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்