தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் கற்பழித்து கொலை: வழக்கு பதிவில் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் வழக்கு பதிவில் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (வயது 27), 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடிய சம்பவம் நடந்த சூழல், நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.

பிரியங்கா ரெட்டி, கடந்த 27-ந் தேதி அவசர பணி நிமித்தமாக மாதாப்பூர் கால்நடை மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுள்ளார். ஐதராபாத்தில் சம்சாபாத் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 2 சக்கர வாகனத்தில் சென்றவர், வழியில் ஒரு சுங்க சாவடி அருகே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து கால்டாக்சியில் பணிக்கு சென்றுள்ளார்.

இரவு 9 மணிக்கு பணி முடித்து வீடு திரும்பும்போது 2 சக்கர வாகனத்தை எடுப்பதற்காக சுங்கசாவடி சென்றால், அங்கே அவரது இரு சக்கர வாகனம் பஞ்சராகி நிற்பதைக் கண்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்