தேசிய செய்திகள்

இந்தியாவில் 16 நாளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் 16 நாளில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 42 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்து, உலகின் மாபெரும் தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி 16-ந் தேதி அமலுக்கு வந்தது.

இந்த திட்டத்தின் கீழ், நேற்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை நாட்டில் 18 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 579 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

* சுகாதார பணியாளர்களில் 96 லட்சத்து 27 ஆயிரத்து 650 பேர் முதல் டோசும், 66 லட்சத்து 22 ஆயிரத்து 40 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

* 1 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 871 முன்கள பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 81 லட்சத்து 49 ஆயிரத்து 613 முன்கள பணியாளர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

* 60 வயது கடந்த 5 கோடியே 43 லட்சத்து 17 ஆயிரத்து 646 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 1 கோடியே 75 லட்சத்து 53 ஆயிரத்து 918 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டு விட்டனர்.

* 45 வயது கடந்தவர்களில் 5 கோடியே 68 லட்சத்து 5 ஆயிரத்து 772 பேர் முதல் டோஸ், 87 லட்சத்து 56 ஆயிரத்து 313 பேர் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர்.

18-45 வயது பிரிவினர்

* 18-45 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது கடந்த 1-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த 16 நாட்களில் 18-45 வயது பிரிவினரில் 42 லட்சத்து 58 ஆயிரத்து 756 பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்