திருவனந்தபுரம்,
கேரளா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் குழந்தைகளின் ஆபாச படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன என்று இன்டர்போல் அம்மாநில அரசுக்கு தகவல் தெரிவித்தது.
அதன்படி மாநிலத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.