தேசிய செய்திகள்

கேரளாவில் அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை...!

கேரளாவில் அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கேரளா,

நவீன உலகில் செல்போன் நாம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் அளவிற்கு டெக்னாலஜி காணப்படுகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் செல்போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மருத்துவமனை போன்ற பெரும்பாலான இடங்களில் செல்போன் உபயோகத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் அண்டை மாநிலமான கேரளாவில் அரசுப் பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பேருந்தில் பயணிக்கும் போது பலர் இடையூறு தரும் வகையில் செல்போன் பயன்படுத்துவதாக புகார் அளித்ததால் கேரள அரசு தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகளுக்கு தொடர்ந்து தொந்தரவு அளிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. புதிய உத்தரவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்துமாறு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்