தேசிய செய்திகள்

மங்களூருவில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

மங்களூருவில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் பார்கே பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் ஆட்டோவில் இருந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், ஆட்டோவில் சோதனை நடத்தினர்.

அப்போது ஆட்டோவில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கணேஷ் (வயது 28), அபிலாஷ் (27), ராகுல் (25) என்பதும், இவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.1.36 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 133 கிராம் கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோ, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பார்கே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு