தேசிய செய்திகள்

புனே மாவட்டத்தில், இந்த மாத இறுதிக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் - சுகாதாரத்துறை கணிப்பு

புனே மாவட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சுகாதாரத்துறை கணித்து உள்ளது.

தினத்தந்தி

புனே,

இது குறித்து புனே மண்டல கமிஷனர் சவுரப் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புனே மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 82 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இறப்பு விகிதம் 2.30 சதவீதமாக உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டும் என்று சுகாதாரத்துறையினரால் கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த காலக்கட்டத்துக்குள் மேலும் 50 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவார்கள்.

புனே கோப் என்ஜினீயரிங் கல்லூரியில் பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் வருகிற 20-ந்தேதி நிறைவு பெறும். இதேபோல மற்றொரு சிகிச்சை மையம் பிம்ரி சிஞ்ச்வாட்டில் அமைய உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்